மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த நிலையில் குறித்த நபர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடியுள்ளார்.
குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளிகளையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சி.சி.டி.வி. காணொளிகளை மையப்படுத்தி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைதான சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM