இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் காணாமல் போன தமது கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தவர்களுக்கு 85,000 இந்திய ரூபா (சுமார் 378,000 இலங்கை ரூபா) வெகுமதி வழங்கியுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் ஷெட்டி என்பவர் சாம்பல் நிறமான இரு ஆபிரிக்க கிளிகளை வளர்த்து வந்தார். ருஸ்டோமா மற்றும் ரியோ என அவற்றுக்குப் பெயரிடப்பட்டிருந்தது.
அண்மையில் அவற்றின் கூடு திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், ருஸ்டோமா எனும் கிளி பறந்து சென்றுவிட்டது.
இக்கிளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 50,000 இந்திய ரூபா (சுமார் 222,000 இலங்கை ரூபா) வழங்குவதாக அர்ஜுன் ரெட்டி தம்பதியினர் அறிவித்தனர். கிளி ஒன்றுக்கு இவ்வளவு பணம் வழங்க முன்வந்தமை ஊடகங்களில் செய்தியாகியது.
5 நாட்களின் பின்னர் தொழிலாளர்கள் இருவர் இக்கிளியை கண்டுபிடித்து, அர்ஜுன் ரெட்டி குடும்பத்தினரிடம் சேர்த்தனர்.
இக்குடும்பத்தின் வீட்டிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் மேற்படி கிளி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கிளி மீளக் கிடைத்ததால், மிக மகிழ்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் மேற்படி தொழிலாளர்களுக்கு 85,000 இந்திய ரூபாவை வெகுமதியாக வழங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM