(நா.தனுஜா)
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
ஜுலை 9 ஆம் திகதி போன்ற நாள் மீண்டும் வெகுவிரைவில் வரும். அப்போது தம்மீதான அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தமது உயிரைப் பணயம்வைத்து முன்னேறிவரும் மக்களை எவராலும் தடுக்கவியலாது.
அதேபோன்று மக்களின் போராட்டத்தை வசைபாடிய சனத் நிஷாந்த போன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலநிலை பிரகடனத்திற்கு சார்பாக வாக்களித்தவர்கள் இந்நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்காகக் கைதூக்கியவர்களாவர். அதற்காக 120 பேர் வாக்களித்தனர்.
அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஜனநாயகத்தையும் சீரழிக்கவேண்டாமென 63 பேர் வாக்களித்தனர். தற்போது இவ்விரு வாக்குகள் தொடர்பிலும் மக்களுக்கு சிறந்த புரிதல் இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் நேற்று முழுவதும் சிரேஷ்ட அமைச்சர்கள் தாங்கள் இழந்த விடயங்கள், தாம் முகங்கொடுத்த அசௌகரியங்கள், தனிப்பட்ட இழப்புக்கள், பொருளாதார அழிவுகள் பற்றியே உரையாற்றினர். அவர்கள் தமக்குரிய பொறுப்பை மறந்துவிட்டுப் பேசினார்கள்.
ஜனநாயக முறையின்படி பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள், தாம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறந்து செயற்பட்டதை நேற்று முன்தினம் நேரடியாகக் கண்டோம்.
தமது சொத்துக்கள் சேதமடையும்போது வேதனையுடன் பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய உறுப்பினர்களால் தற்போது மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
ஜுலை 9 ஆம் திகதி போன்ற நாள் மீண்டும் வெகுவிரைவில் வரும். அப்போது தம்மீதான அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தமது உயிரைப் பணயம்வைத்து முன்னேறிவரும் மக்களை எவராலும் தடுக்கவியலாது. அதேபோன்று மக்களின் போராட்டத்தை வசைபாடிய சனத் நிஷாந்த போன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM