( எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடல் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை அருகில் தங்கியிருந்த 04 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த கோரள வல்பிட்டகே ஏக்கநாயக்க சரத் தர்மசேனகே ரோஹன குமார, கொழும்பு 7 ஐ சேர்ந்த ரணசிங்க ஆரச்சிலாகே சானக மதுசங்க, கம்பஹாவை செர்ந்த சந்ததாச டிக்சன், கொழும்பு 9 ஐ சேர்ந்த மொஹம்மட் சஹ்ரான் சும்ரி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
பண்டாரநாயக்க உருவச் சிலையிலிருந்து 50 மீட்டருக்கு உட்பட்ட பகுதிக்குள் தங்கியிருந்தமையால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை காணப்படும் பகுதியில் 50 மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM