அவுஸ்திரேலியாவில் 2022 ஆரம்பத்தில் கொவிட் உச்சநிலையில் காணப்பட்டவேளை மருத்துவமனைகளில் காணப்பட்ட நோயாளர்களை விட அதிகளவான கொவிட் நோயாளர்கள் தற்போது மருத்துவமனையில் காணப்படுகின்றனர் என சுகாதார திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை மருத்துவமனைகளில் 5433 கொவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இது ஜனவரியில் காணப்பட்ட 5391 நோயாளர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.
ஒமிக்ரோனின் துணைவகைகளின் பரவலே கொவிட் காரணமாக அதிகளவானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு காரணம்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற அதேவேளை தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.
ஜனவரியில் 425 பேர் தீவிரகிசிச்சைபிரிவுகளில் காணப்பட்டனர் ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 166 பேரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரசின் தன்மை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை மற்றும் சிகிச்சைகள் காரணமாகவே நோயாளர்கள் தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவது குறைவாக காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் கிறிஸ்மொய் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறைந்த எண்ணிக்கையானவர்கள் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை சிறந்த அறிகுறியாக கருதக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM