பொரளை - காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தில் இருந்து பெற்றோல் திருடியமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வாகனத்தின் உரிமையாளரை மற்றுமொரு நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை காசல் வீதியில் வசித்துவந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM