கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் !

25 Jul, 2022 | 09:54 AM
image

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 

1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதன்போது கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், வடக்கு நோக்கி அகதிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் ஆதரவுடன்  குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வாறு, தமிழருக்கு எதிரான இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் 39 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு, இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 1983 ஜூலையில் கொடூரமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞர் பிரபுத்த தனுஷ்க காலிமுகத்திடலில் ஆற்றுகையொன்றை அரங்கேற்றியிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கலைஞர் பிரபுத்த தனுஷ்க என்பவரால் மேற்கொள்ளப்பட்ட வலிமிகுந்த கலைப்படைப்பாக மனதை உருக்கும் விதத்தில் அரங்கேற்றியிருந்தார்.

இதேவேளை, 1983 ஜூலை மாதம் அரசாங்கத்தின் ஆதரவுடன் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் கொழும்பு பொரளை மயானமருகில் இடம்பெற்றது. வடக்கு-கிழக்கு-தெற்கு-மலையகம்-புலம்பெயர் சகோதரத்துவம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் - மாற்றம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21