“ கோட்டா கோ கம” போராட்டக்களத்தை படையினர் அகற்றவில்லை : அமைதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில்

Published By: Digital Desk 4

25 Jul, 2022 | 07:50 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டக்களம் அகற்றப்படவில்லை என ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை எங்கள் பிரதிநிதிகள் எவரும் சந்திக்கவில்லை - கோட்டா கோ கம  ஆர்ப்பாட்டக்காரர்கள் | Virakesari.lk

அமைதியான முறையில் வன்முறையற்ற வகையில் ஒன்று கூடும் உரிமையினை உறுதிப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உறுதியளித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்று கூடியிருந்தவர்களை வெளியேற்றியமை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சர்வதேச இணக்கப்பாட்டின் 21 ஆவது உறுப்புரை மற்றும் அமைதியான ஒன்று கூடலை குறிப்பிடும் அரசியலமைப்பின் 14(1)(ஆ) அத்தியாயம் ஆகிய இரு விடயங்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

அரச கட்டடங்களுக்கு இடையூறு விளைவிக்கவும் மற்றும் அரச சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக இடையூறு விளைவிக்க போராட்டகாரர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி அதனை தெளிவுபடுத்தினார்.

சொத்துக்கள் மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகருக்குள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்குவதை உறுதிப்படுத்துவம் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இராஜதாந்திரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

விகாரமாதேவி பூங்கா, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் மைதானம் ஆகியவற்றில் சகல வசதிகளுடன் அமைதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டகளம் அகற்றப்படவில்லை என இச்சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37