தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவு ; தமிழக அரசுக்கு நன்றி - செந்தில் தொண்டமான் 

Published By: Digital Desk 4

24 Jul, 2022 | 05:52 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய தமிழக அரசின் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் அடங்கிய இறுதிப் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதுதாகவும் விநியோக நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  நாட்டு மக்கள் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றிதெரிவிப்பதாகவும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: செந்தில் தொண்டமான் | Virakesari.lk

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரால் இலங்கைக்கு உலர் உணவு பொருட்கள் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வந்தன 

இந்நிலையில் இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய மக்களுக்கு இந்த உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கமைவாக, மொத்தமாக இதுவரையில் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 102 மெற்றிக்தொன் மருந்து பொருட்கள் மற்றும் 500 மெற்றிக்தொன் பால் பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் 23 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை இலங்கை முழுவதும் உள்ள 25 மாவட்டங்களுக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன 

தமிழக அரசினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களை ஏற்றிய  இறுதி கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தது. அதனையும் ஏற்கனவே நிவாரணப் பொருட்கள் பெற்று கொடுக்கப்படாத வறிய குடும்பங்களுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் அடிப்படையில்  தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவடைந்துள்ளது.

அதன் அடிப்படையில் நாம் இலங்கை மக்கள் சார்பில் இந்திய தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20