பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 37 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
`
முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேக நபர் கத்தியால் குத்திய சம்பவம் பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பின்னர், பிடிகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு உதவச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சந்தேக நபர் பொலிஸ் குழுவினரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதுடன் கைக்குண்டு போன்ற பொருளை பொலிஸ் குழு மீது வீச முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது காயமடைந்த சந்தேக நபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சந்தேக நபர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM