இரவுநேரத் தாக்குதல்களுக்கு அஞ்சோம் : மீண்டும் ஒன்றிணைவோம் - 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் சூளுரை

24 Jul, 2022 | 07:40 AM
image

(நா.தனுஜா)

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் சிலர் வீரகேசரியிடம் தெரிவித்தனர்.

 தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப்போராட்ட இடமான கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை பெருமளவான பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், அங்கிருந்த போராட்டக்காரர்கள்மீதும் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டு, கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் ஜனாதிபதி செயலகமும் படையினரால் கைப்பற்றப்பட்டது.

 ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறுவதுடன் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுவதற்குப் போராட்டக்காரர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் மேற்கொண்டு 24 மணிநேரம் கூட முடிவடைந்திருக்காத பின்னணியில படையினரின் இரும்புக்கரங்கொண்டு மக்களின் போராட்டம் அடக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

 அதுமாத்திரமன்றி ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வீதிகளும் பாதுகாப்புப்படையினரால் முடக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் அப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று சனிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தைச்சூழ பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக அப்பகுதிக்குள் நுழைய முடியாதவாறு மறியல்கள் இடப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன் அங்கிருந்த கூடாரங்களில் சொற்பளவானோரையே காணக்கூடியதாக இருந்தது. 

இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என்றும் அங்கிருந்த போராட்டக்காரர்கள் சிலர் வீரகேசரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09