(இராஜதுரை ஹஷான்)
பாடசாலை மாணவர் போக்குவரத்து வசதிக்கு தேவையான எரிபொருளை நாடு தழுவிய ரீதியில் உள்ள டிப்போக்கள் ஊடாக விநியோகிக்க உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.
கறுப்புச்சந்தையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும்,வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கல்வி,கடற்தொழில்,சுற்றுலா,விவசாயம் ஆகிய சேவைகளுக்கும் பொது போக்குவரத்து சேவைகளுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் விரிவுபடுத்தப்பட்ட செயற்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
அதற்கமைய பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்து மற்றும் வேன்களுக்கு நாடு தழுவிய ரீதியில் உள்ள அரச டிபோக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்க உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
கடற்றொழில்,சுற்றுலா மற்றும் உரம் விநியோகம்,விவசாயம் ,பொது போக்குவரத்து சேவைக்கு தேவையான எரிபொருளை நடைமுறையில் உள்ள திட்டத்திற்கமைய அரச டிபோக்கள் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
எரிபொருள் வரிசையில் இருந்து பெற்றுக்கொண்டு அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரானக சட்ட நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM