(எம்.வை.எம்.சியாம்)
கடமையில் இருந்த ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வெயாங்கொடை அண்மித்த சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் பயணித்து கொண்டிருந்த சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போது இவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது மது அருந்தியவர்களை ரயில் பெட்டியிலிருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்த போது அவர் தள்ளப்பட்டு ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வெயாங்கொடை பொலிஸார் வதுராவ புகையிரத நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிடந்த பாதுகாப்பு அதிகாரியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர்கள் 31 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நொச்சியாகம மற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM