ரயிலிலிருந்து தள்ளப்பட்டு ரயில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு - இளைஞர்கள் இருவர் கைது

Published By: Digital Desk 3

23 Jul, 2022 | 02:26 PM
image

 (எம்.வை.எம்.சியாம்)

கடமையில் இருந்த ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வெயாங்கொடை அண்மித்த சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் பயணித்து கொண்டிருந்த சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போது இவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது மது அருந்தியவர்களை ரயில் பெட்டியிலிருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்த போது அவர் தள்ளப்பட்டு ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வெயாங்கொடை பொலிஸார் வதுராவ புகையிரத நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிடந்த பாதுகாப்பு அதிகாரியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர்கள் 31 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நொச்சியாகம மற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25