ரயில் கட்டணத்தை அதிகரித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது - ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:11 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை ரயில்வே திணைக்களத்தினது வருமானத்தை அதிகரிப்பதற்கு பல வழிகள் காணப்பட்டாலும் ரயில் பயணக் கட்டணத்தை  மாத்திரம் அதிகரித்து ‍பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத  சோமரட்ண தெரிவித்தார்.

ரயில்வே போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து மற்றும் பொதிகள் சேவைகள் கட்டண திருத்தம் குறித்து பொது மக்களுக்கு தெரிவிப்பதற்கான போதிய கால அவகாசம் இல்லை என்பதுடன், ரயில்வே நிலையங்களில் கணக்குப் பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஒரு நாள் போதாது.ஆகவே, எதிர்வரும் முதலாம்  திகதி முதல் புதிய ரயில் போக்குவரத்து கட்டணத்தை அமுல்படுத்துவது சிறப்பாக இருக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் போக்குவரத்து கட்டணம் திருத்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21 ஆம் திகதியன்று அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டிருந்து.

இந்நிலையிலேயே, கட்டண திருத்தம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க போதிய கால அவகாசம் இல்லை என்றும் , ரயில் நிலைய கணக்குப் பதிவுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் குறிப்பிட்டு ரயில் நிலைய அதிபர் சங்கத்தினர் இலங்கை ரயில்வே திணைக்கள பொது முகாமையாளருக்கு எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19