இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலையில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் - உலக உணவு திட்டம் அறிக்கை

Published By: Digital Desk 3

21 Jul, 2022 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளனர். நெருக்கடி நிலைமை ஏற்படும் பொது இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் என்று உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளது.  

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

6.7 மில்லியன் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவு வகைகளை உட்கொள்வதில்லை. விவசாயிகளுக்கு விதைகள், உரம் மற்றும் நிதியுதவி கிடைக்கப் பெறாவிட்டால், வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் செய்கை 50 சதவீதமாகக் குறைவடையும் அபாயம் உள்ளது. அத்தோடு மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளுக்கு மீளமுடியாத நிலைமை ஏற்படும்.

தேசிய ரீதியில் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளனர். இது நூற்றுக்கு 28.3 சதவீதமாகும். இவர்களில் ஆகக் குறைந்தது 65 600 பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்றியுள்ளனர். இந்த புள்ளி விபரங்கள் கடுமையாக அதிகரிக்கக் கூடும்.

வானளாவிய ரீதியிலான உணவுச் செலவுகள் மக்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை கடினமாக்குகின்றன. சுமார் 6.7 மில்லியன் மக்கள் போதுமான உணவை உட்கொள்வதில்லை மற்றும் 5.3 மில்லியன் மக்கள் உண்ணும் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஐந்தில் இரண்டு குடும்பங்கள் தங்கள் வருமானம் பாதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, 5 மில்லியன் மக்கள் நெருக்கடி அல்லது அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். 

இது வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான அவர்களின் நடுத்தர மற்றும் நீண்ட காலத் திறனை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07