இத்தாலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 98 வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுள்ளார்.
ஜோசப்பி பட்டேர்னோ எனும் இவர் இத்தாலியில் மிக அதிக வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றவராக விளங்குகிறார்.
இரு வருடங்களுக்கு முன்னர் இளமாணி பட்டம் பெற்ற அவர், அண்மையில் இத்தாலியின் பலேர்மோ பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவவியலில் முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இத்தாலியின் சிசிலி தீவில் 1923 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோசப்பி பட்டேர்னோ.
குடும்பத்தின் வறுமை காரணமாக, ஆரம்பக் கல்வியை மாத்திரமே அவரால் பெற முடிந்தது.
பின்னர் கடற்படை சிப்பாயாக இணைந்து 2 ஆம் உலக யுத்தத்தில் போராடினார். அதன்பின் ரயில்வே துறையில் அவர் பணியாற்ற இணைந்தார்.
31 வயதில் தான் அவர் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தார்.
முதுமையிலும் கல்வி மீது கடும் ஆர்வம் கொண்டிருந்த பட்டேர்னோ, சில வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியை தொடர ஆரம்பித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM