உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 5 தடவைகள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றதால், அப்பெண்ணையும் பிள்ளைகளையும் அவரின் கணவர் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார்.
நலங்கோ குளோரியா எனும் இப்பெண், ஸலலோங் என்பவர் திருமணம் செய்திருந்தார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 8 பிள்ளைகள் பிறந்திருந்தனர். இப்பிள்ளைகள் அனைவரும் 5 தடவைகளில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்.
அண்மையில் இத்தம்பதிக்கு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இவ்வாறு 5 தடவைகள் இரட்டைக் குழந்தைகளாக 10 பிள்ளைகள் பிறந்த நிலையில், குளோரியாவையும் பிள்ளைகளையும் அப்பெண்ணின் கணவர் ஸ்லோங்கோ வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
'இது குறித்து தொலைக்காட்சியொன்றிடம் குளோரியா பேசுகையில், 'நான் கர்ப்பிணியாக இருந்தபோது. ஏன்னை வீட்டை விட்டுச் செல்லுமாறு எனது கணவர் கூறினார். இக்குழந்தைகளைப் பிரசவித்தமைக்காக நான் கவலையடையவில்லை.
இக்குழந்தைகளை அவர்களின் தந்தை விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். அவரின் இடத்தில் இக்குழந்தைகளை நான் விட்டுச்செல்ல முடியாது.
அனைத்து சவால்களுக்கும் மத்தியில் எந்த பிள்ளையையும் நான் கைவிடவில்லை. அவர்களை இறைவன் பாதுகாப்பார் என்பது என்பதை நான் அறிவேன்' எனக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM