(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் கட்சிகள் எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை என்பது தேர்தல் பெறுபேறுகளின் மூலம் உணர்ந்கொள்ளலாம் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற ஜனநாயக ரீதியிலேயே இன்றைய தினம் ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றது.. அதன்படி தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து எமது கட்சியை பலப்படுத்தி பயணிக்க வேண்டும். இப்போது பாராளுமன்றம் ஒருபக்கமும் மக்கள் வேறு பக்கமாகவும் உள்ளனர். இதுவே உண்மை. ஏனெனில் இது மக்கள் எதிர்பார்த்த பெறுபேறு அல்ல.
அத்துடன் புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் எங்களின் கட்சி மாத்திரமன்றி அனைத்து கட்சிகளும் கட்சி எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை என்றே தெரிகின்றது. தேர்தல் பெறுபேற்றின் மூலம் அதனை எமக்கு உணர்ந்துகொள்ளலாம்.
இதேவேளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் நாங்கள் நாட்டுக்காக எந்தவொரு நபருக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM