கட்சிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய உறுப்பினர்கள் செயற்படவில்லை - மைத்திரி

Published By: Digital Desk 4

20 Jul, 2022 | 09:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் கட்சிகள் எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை  என்பது தேர்தல் பெறுபேறுகளின் மூலம் உணர்ந்கொள்ளலாம்  என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமது கையில் - மைத்திரிபால  சிறிசேன | Virakesari.lk

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற ஜனநாயக ரீதியிலேயே இன்றைய தினம் ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றது.. அதன்படி தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து எமது கட்சியை பலப்படுத்தி பயணிக்க வேண்டும். இப்போது பாராளுமன்றம் ஒருபக்கமும் மக்கள் வேறு பக்கமாகவும் உள்ளனர். இதுவே உண்மை. ஏனெனில் இது மக்கள் எதிர்பார்த்த பெறுபேறு அல்ல.

அத்துடன் புதிய ஜனாதிபதி தெரிவு விடயத்தில் எங்களின் கட்சி மாத்திரமன்றி அனைத்து கட்சிகளும் கட்சி எடுத்த தீர்மானங்களுக்கமைய உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை என்றே தெரிகின்றது. தேர்தல் பெறுபேற்றின் மூலம் அதனை எமக்கு உணர்ந்துகொள்ளலாம்.

இதேவேளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் நாங்கள் நாட்டுக்காக எந்தவொரு நபருக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03