எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மழை நீடித்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் : நுவரெலியாவின் இருவேறு பகுதிகளில் 18 பேர் குடிபெயர்வு

Published By: Robert

05 Nov, 2016 | 02:55 PM
image

(.கமலநாதன்)

நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும் மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளது எனவே அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொலை கொன்கிடிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் உள்ளமையினால்  18 பேர் குடிபெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து மக்கள் பாதுகாப்பு நிமிர்த்தமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையி்ல் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரி ஏற்படுதல் மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விளக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல, தெஹியோவிட, ருவன்வெல்ல, யடியந்தொட, புலம்கோபிடிய, அரநாயக்க, கேகாலை, மவனெல்லை மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் குறிப்ப பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வானிலை அவதான நிலையம்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனியிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதாக நிலையம் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27