இன்றைய வாக்கெடுப்பை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய ஒத்துழையுங்கள் - அனைத்து கட்சிகளிடமும் சபாநாயகர் வேண்டுகோள்

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 09:43 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெறும் வாக்கெடுப்பினை ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நிறைவு செய்ய சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது மேற்கண்டவாறு  வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைக்கமைய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்ய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சகல நெருக்கடிகளுக்கும் ஜனநாயக வரைபிற்குட்பட்ட வகையில் திPர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றியை வேண்டும் என சபாநாயகர்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெறும் வாக்கெடுப்பில் தெரிவத்தாட்சி அலுவலராக பணிபுரியவுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரைக்கமைய வாக்கினை பதிவு செய்தல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வினை எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கும்,தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவும் அப்பிரரேரணையை சபைக்க சமர்ப்பிக்க பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பிலான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51