சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

18 Jul, 2022 | 10:23 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் அபாயகரமாக வாகனம் செலுத்தி ஒருவருக்கு படுகாயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரைவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய - பிரதமர் ரணில் ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு  பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது - சம்பிக்க | Virakesari.lk

குறித்த வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பானர், சம்பிக்க ரணவக்க தரப்பினர்  முன் வைக்க  உத்தேசித்துள்ள அடிப்படை ஆட்சேபனத்தை முன் வைக்க சந்தர்ப்பம் அளிக்கும் விதமாக ஆகஸ்ட் 31 இல் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

திங்கட்கிழமை (18) இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் ஆஜரானார். சம்பிக்க ரணவக்க சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன ஆஜரானார்.

 அதன்படி மன்றில் விடயங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன இவ்வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனத்தை முன் வைத்தார்.

 இந் நிலையிலேயே அடிப்படை ஆட்சேபனைகள் குறித்த வாதங்களை  முன் வைப்பதற்காக வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55