தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளின் தலைவரான பென் ஸ்டோக்ஸ், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியே பென் ஸ்டோக்ஸ் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும்.
இங்கிலாந்து அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 39.44 என்ற துடுப்பாட்ட சராசரி பெற்றுக்கொண்டுள்ளார். இவரது ஒருநாள் போட்டிகளில் 2919 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார். இதில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் உள்ளடங்கும் இவரது. ஸ்ட்ரைக் ரேட் 95.26 ஆகவுள்ள நிலையில், 38 பவுண்டரி 88 சிக்ஸர்களுடன். அதிகபட்ச ஓட்டங்களாக ஆட்டமிழக்காது 102 .ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது ஒருநாள் போட்டி ஓய்வு குறித்து அவர் குறிப்பிடுகையில்,
“இந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன், நாளை (செவ்வாய்) நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே என் கடைசி போட்டி. மிகவும் கடினமான முடிவுதான். என் சகாக்களுடன் இந்த வடிவத்தில் ஆடிய அனைத்து கணங்களையும் நேசிக்கிறேன்.
என்னால் 100 சதவீதம் பங்களிப்பு செய்ய முடியவில்லை. யார் இங்கிலாந்தின் உடைகளை அணிந்தாலும் அதை விரயம் செய்ய முடியாது ஆகவே ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தேன்.
3 வடிவங்கள் என்பது என்னால் இப்போது இயலாத ஒன்று. ஷெட்யூல் மிகவும் டைட்டாக இருப்பதால் என் உடல் அதற்கேற்ப தயாராக இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்பும் வருவதில்லை. மேலும் இன்னொருவரின் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், இன்னொரு வீரர் என்னை விட ஜோஸ் பட்லருக்கு நல்ல பங்களிப்பு செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.
கடந்த 11 ஆண்டுகள் எனக்குக் கிடைத்த நினைவுகள் இன்னொரு வீரருக்கும் கிடைக்கட்டும். இந்த முடிவை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பங்களிப்பையும் செய்வேன், டி20 கிரிக்கெட்டில் முழு மூச்சாக இறங்குவேன்” என தனது உருக்கமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM