காலிமுகத்திடல் போராட்டக்காரர்களில் முக்கியமான மூவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி : சி.ஐ.டி, விசாரணை

Published By: Vishnu

18 Jul, 2022 | 05:18 PM
image

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் முக்கியமான மூவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்பப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கியமான மூவரின் வங்கிக்கணக்குகளிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பெத்தும் கேர்ணலை கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாகவும் எனினும் தற்போது அவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை எரித்து பழங்கால பொருட்கள் திருடப்பட்டு, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் சேதஙகளை ஏற்படுத்தியமை தொடர்பில் சுமார் எழுபது சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரதிடு செனிவரட்ண, டிலான் சேனநாயக்க, அவிஸ்க விராஜ் கொனர ஆகிய மூவரும் சமீபத்தில் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தலா 150 இலட்சம் ரூபாய் வீதம் 450 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36