காலிமுகத்திடல் போராட்டக்காரர்களில் முக்கியமான மூவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி : சி.ஐ.டி, விசாரணை

Published By: Vishnu

18 Jul, 2022 | 05:18 PM
image

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களில் முக்கியமான மூவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்பப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கியமான மூவரின் வங்கிக்கணக்குகளிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பெத்தும் கேர்ணலை கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாகவும் எனினும் தற்போது அவரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை எரித்து பழங்கால பொருட்கள் திருடப்பட்டு, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் சேதஙகளை ஏற்படுத்தியமை தொடர்பில் சுமார் எழுபது சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரதிடு செனிவரட்ண, டிலான் சேனநாயக்க, அவிஸ்க விராஜ் கொனர ஆகிய மூவரும் சமீபத்தில் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தலா 150 இலட்சம் ரூபாய் வீதம் 450 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27