சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட தனது மனைவியை நீண்ட காலமாக எந்நேரமும் தன்னுடன் அழைத்துச் சென்று, அவரை பராமரித்து வருகிறார். இந்நபர், மனைவியை பராமரிக்கும் விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
நீ ஜியான்வென் எனும் 39 வயதான இந்நபர், காங்சு மாகாணத்தின் லோங்னன் நகரைச் சேரந்தவர். லொறி சாரதியாக இவர் பணியாற்றுகிறார்.
நீ ஜியான்வென்னின் மனைவி காவோ யின்கியிங்குக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அவரின் கை,கால்கள் செயலிழந்தன. இதனால், நடக்கவும் முடியாத நிலைக்கு அப்பெண் தள்ளப்பட்டார்.
இதையடுத்து. தனது அன்பு மனைவியை எந்நேரமும் தனக்கு அருகிலேயே வைத்துப் பராமரிக்கிறார் ஜியான்வென்.
தனது சொந்த ஊரிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஷாங்காய் நகரில் 2007 ஆம் ஆண்டிலிருந்து லொறி சாரதியாக ஜியான்வென் பணியாற்றுகிறார்.
தன்னால் வீட்டிலுள்ள மனைவியை பராமரிப்பது சிரமம் என்பதால், தனது லொறியிலேயே எல்லா இடங்களுக்கும் மனைவியையும் அழைத்துச் செல்கிறார் ஜியான்வென்.
மனைவியை லொறியில் தூக்கி இறக்கும் அவர், அவரை குளிக்கச்செய்வது, ஆடை அணிவிப்பது, அலங்காரங்களை செய்வது என அனைத்தையும் தானே கவனித்துக்கொள்கிறார் ஜியான்வென்.
'என் மனைவி காவோ யின்கியிங் தான் எனது முதல் காதல். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்' என்கிறார் ஜியான்வென்.
'வீட்டில் எனது சிறு பிள்ளைகள் இருவர் உள்ளனர். 76 வயதான எனது தாய்க்கு, எனது மனைவியை பராமரிக் கும் அளவுக்கு சக்தியில்லை அதனால், என் மனைவியை எனக்கு அருகிலேயே வைத்துக்கொள்கிறேன்' எனவும் ஜியான் வென் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு சிகிச்சைகளுக்குப் பின்னர், தற்போது ஜியான்வென்னின் உதவியுடன் சிறிது தூரம் நடக்கும் நிலைக்கு அவரின் மனைவி முன்னேறியுள்ளார்.
லொறியில், தன் மனைவிக்கான கழிவறை, குளியல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இடம் போதாமல் உள்ளது என்பது தற்போது நீ ஜியான்வென்னின் கவலை. எதிர்காலத்தில் பெரியதொரு வாகனத்தை வாங்கி, அதில் மனைவிக்கு கூடுதல் இடத்தை ஒதுக்க வேண்டும் என தான் விரும்புவதாக ஜியான்வென் கூறுகிறார்.
'என் மனைவி உடல் ஆரோக்கியத்துடன் இருந்போது வீட்டில் எனது சகல விடயங்களையும் அவரே கவனித்துகொண்டார்.
என் இரு பிள்ளைகளைப் பெற்றார். அவர் சுகவீனமடைந்திருக்கும் போது நான் அவரை கைவிட்டுவிட முடியாது. அப்படிச் செய்தால் எனது வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்ச்சி இருக்கும்' என நீ ஜியான்வென் கூறு கிறார்.
முன்னுதாரணமான மனிதர் என நீ ஜியான்வென்னை பலரும் பாராட்டு கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM