பியர் போத்தல்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றிலிருந்து பெருமளவான பியர் வீதியில் கொட்டப்பட்ட சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து வீதியை சுத்தமாக்குவதற்கு உதவிய மக்களுக்கு குறித்த பியர் நிறுவனம் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் சுன்சியோன் நகரின் வளைவான பகுதியொன்றில் மேற்படி வாகனம் சென்றுகொண்டிருருந்தபோது, அதன் பக்கவாட்டுக் கதவு திறந்துகொண்டது.
இதனால், பியர்போத்தல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான பெட்டிகள் வீதியில் வீழ்ந்து உடைந்தன. வீதியில் பியர் கொட்டப்பட்டதும் அப்பகுதியை சுத்தமாக்குவதற்கு அங்கிருந்த பொதுமக்கள் உதவினர்.
இவ்வாறு உதவிய மக்களுக்கு குறித்த பியர் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
மேற்படி பியர்பெட்டிகள் வீதியில் வீழ்ந்தபோது கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM