பாலியல் விளையாட்டு விபரீதமானதால் பிரித்தானிய ஆண் மரணம், காதலி காயம் ; இத்தாலிய ஹோட்டல் அறையில் சம்பவம்

Published By: Vishnu

18 Jul, 2022 | 11:51 AM
image

பாலியல் விளை­யாட்­டொன்று விப­ரீ­த­மா­னதால் ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் அவரின் காதலி கடும் காயங்­க­ளுக்­குள்­ளான சம்­பவம் இத்­தா­லியில் இடம்­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. 

இத்­தா­லியில் உல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற புளோரன்ஸ் நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. தேனி­ல­வுக்குச் செல்லும் தம்­ப­தி­யி­ன­ரிடம் பிர­சித்தி பெற்ற ஒரு ஹோட்டல் இது.

பிரிட்­டனைச் சேர்ந்த ஜோடி­யொன்றே இந்த விப­ரீத பாலியல் விளை­யாட்டில் ஈடு­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

40 வய­தான ஆண் ஒருவர் இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்ளார். இந்­ந­பரும் 43 வய­தான அவரின் காத­லியும் இங்­கி­லாந்தின் மென்­செஸ்டர் பகு­தியை சேர்ந்­த­வர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஓர் இர­வுக்கு சுமார் 400 யூரேரா கட்­டணம் வசூ­லிக்கும் ஹோட்டல் அறை­யொன்றில் இந்த ஜோடி­யினர் தங்­கி­யி­ருந்­தனர். 

மேற்­படி அறையில் திடீ­ரென கூக்­குரல் கேட்ட நிலையில், அதி­லி­ருந்த பெண், ஹோட்டல் பணி­யா­ள­ரிடம் உதவி கோரினார். அப்­பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்­பட்­டன.

ஆனால், மேற்­படி அறை­யி­லி­ருந்து கூக்­கு­ரல்கள் கேட்­ட­வுடன், அரு­கி­லுள்ள அறை­களில் இருந்த பலர், ஹோட்டல் வர­வேற்புப் பீடத்­துக்கு ஏற்கனவே தகவல் கொடுத்­தி­ருந்­தனர்.

குறித்த அறையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் எனவும், அவரின் உடலில் பல காயங்கள் காணப்­பட்­ட­தா­கவும் இத்­தா­லிய பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

அவரின் காத­லி­யான பெண்ணின் உட­லிலும் பல காயங்கள் காணப்­பட்­டன. 

இது தொடர்­பாக பொலிஸ் அதி­காரி மேலும் கூறு­கையில், “இச்­சம்­ப­வத்தில் தொடர்­பு­டை­ய­வர்கள் இரு­வரும் பிரித்­தா­னி­யர்கள். 

இச்­சம்­ப­வத்­துக்கு இரு கார­ணங்கள் இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. அவற்றில் ஒன்று வாக்­கு­வாதம். மற்­றொரு காரணம் பாலியல் விளை­யாட்டு. ஆனால்  பாலியல் விளை­யாட்டு என்­பதே பொது­வான விசா­ரணைக் கோண­மாக உள்­ளது”  எனத் தெரி­வித்­துள்ளார்.

காய­ம­டைந்த பெண் சிகிச்சை பெற்று வரு­கிறார். அவ­ருக்கு உயி­ரா­பத்து இல்லை எனத் தெரி­விக்கப்­பட்­டுள்­ளது. இப்­பெண்ணை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தும் போது இச்­சம்­பவம் குறித்த உண்­மைகள் வெளி­வரும் என தாம் நம்­பு­வ­தாக இத்­தா­லிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right