உலக்கையால் அடித்து தாயை கொன்ற மகள் - பொரளை - பேஸ்லைன் மாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் சம்பவம்  

Published By: Digital Desk 4

17 Jul, 2022 | 08:45 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தனது வயோதிபத் தாயை தலையில் உலக்கையால் தாக்கி மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று ( 17) பதிவாகியுள்ளது. பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பேஸ்லைன் மாவத்தை - சிங்கஹ புர தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Articles Tagged Under: ஒருவர் கொலை | Virakesari.lk

38 வயதான மகளே இவ்வாறு தனது 65 வயது தாயை உலக்கையால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் 38 வயது மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்த மகளும், கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்ததாக கூறும் பொலிஸார், சந்தேக நபரின் 6 வயது மகளை 65 வயதான தனது தாய் தாக்கியமையை மையப்படுத்தி, 38 வயது மகளால் தாய் மீது உலக்கையால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான மகள், மன நல பாதிப்பு தொடர்பில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொண்ட நிலையில்,  ஒரு சில தினக்களுக்கு முன்னரேயே வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள்,  கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தரவின் கீழ்  உதவி பொலிஸ் அத்தியட்சர் சிந்தக பெரேராவின் ஆலோசப்னைக்கு அமைய பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில திஸாநாயக்கவின் வழி நடாத்தலில் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37