(எம்.மனோசித்ரா)
சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்குமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், பதில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ரன்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான உரிய ஆவணங்களை தயாரித்து, சட்டமா அதிபர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோரிடம் கையளிக்குமாறும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய வெகுவிரைவில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விடுதலை கிடைக்கும் என்று தான் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM