சமையல் எரிவாயு கோரி மன்னாரில் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 02:48 PM
image

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(16) காலை சமையல் எரிவாயு கோரி  மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் இன்றைய தினம் (16) வங்காலை கிராமத்திற்கு விநியோகிக்கப்படாமல் வேறு கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் வங்காலை கிராமத்தில் உள்ள 4 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வங்காலை பிரதான வீதியை மறித்து எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வங்காலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன் போது கிராம மக்கள் தமது பிரச்சினைகளை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்ததோடு,தமது கிராமம் சமையல் எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (20) சமையல் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் வீதியை மறிக்காது அவ்விடத்தில் இருந்து சென்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46