அரசியலமைப்புக்கு அப்பால் மக்கள் சக்தியிடம் உள்ள அதிகாரங்களை மறந்துவிட வேண்டாம் - எச்சரிக்கிறார் குமார் குணரட்னம்

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 12:23 PM
image

(ஆர்.ராம்)

அரசியலமைப்புச் சட்டம் காணப்பட்டாலும் அதற்கு அப்பால் மக்கள் சக்தியிடமே தற்போது அதிகாரம் காணப்படுகின்றது. இதனை அரசியல் கட்சிகள் மறந்து விடக்கூடாது என்று பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய இடைக்கால ஜனாதிபதியை அமைத்தல் மற்றும் பிரதமரைத் தெரிவு செய்தல் ஆகிய விடயத்தில் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் ஒருசில அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது  மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தினால் ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ஷ ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது.

இதுவெறுமனே ராஜபக்ஷக்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் அல்ல. தற்போது ராஜபக்ஷக்களின் பிரதிநிதியான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளார். அவர் ஆட்சி அதிகாரத்தினை தன்னகப்படுத்துவதற்கு முனைந்துகொண்டு இருக்கின்றார்.

இவ்வாறானதொரு நிலைமையில் தான் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அடுத்தகட்ட செயற்றிட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அதனை பிரகடனமாகவும் அறிவித்துள்ளனர்.

ஆகவே அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த விடயங்களை உள்ளீர்ப்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே பதவிகளுக்காக தமக்குள் முரண்பட்டுக்கொண்டிருப்பது பொருத்தமற்றதாகும்.

தற்போது அரசியல் கலாசாரத்தினை, முறைமையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தினை புறந்தள்ளி செயற்படுவது முறையானது அல்ல.

அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாக குறிப்பிடப்பட்டாலும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி கட்டியெழுப்பபட்டுள்ளது. அந்த சக்தியிடம் அதிகாரம் உள்ளது.

ஆகவே அந்த சக்தியின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது.

அதனைவிடுத்து மீண்டும் பழைய பாதையிலேயே செல்வதற்கு விளைந்தால் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

தற்போதைய நிலையில் கட்டியெழுப்பபட்டுள்ள மக்கள் சக்தியை அடிப்படையாக கொண்ட தேசிய மக்கள் சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

அவை நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அதன் மூலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20