எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை : தயாசிறி

Published By: Digital Desk 5

15 Jul, 2022 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தப்படும்.

எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனுக்கல் பரிசீலனை செய்யப்பட்டு,20ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவினை தொடர்ந்து பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்தப்படும். அரசாங்கம் ஒன்று இல்லாத பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அரசியல் செயலொழுங்காக காணப்படுகிறது.

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் புதிய அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்விடயத்தில் நபர் முக்கியமல்ல,எதிர்க்கட்சி தலைவர் பதவி தான் முக்கியமானது.அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

கட்சி தலைவர் கூட்டத்தில் பெரும்பாலான தரப்பினர் இதனையே வலியுறுத்தியுள்ளார்கள்.பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமையில் வெகுவிரைவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியமானது.நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55