மூத்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை தனது 69 ஆவது வயதில் காலமானார்.
நடிகர் பிரதாப் போத்தன்1952 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 13 ஆம் திகதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் பிரதாப் போத்தன் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தான் உயிர் துறந்துள்ளார்.
அவரது உடல் தற்போது இறுதி அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் திரையுலகம் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.
மூடுபனியில் அவர் ஏற்ற சைகோ கில்லர் பாத்திரம் அவருக்கு தமிழ் திரையுலகில் மாஸ் என்ட்ரியை கொடுத்தது. என் இனிய பொன் நிலாவே ஜேசுதாசின் பாடலும் மிகப்பிரபலம்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் நாடக டைரக்டராக வருவார், வாழ்வே மாயத்திலும் அதே போல் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் குடும நண்பராக வருவார். பன்னீர்புஷ்பங்கள் இவர் நடித்ததில் சிறப்பான படம். விசு படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM