சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பொதுமக்களின் பேராவலை ஜூலை 9 போராட்டங்கள் நன்கு புலப்படுத்துகின்றது - கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 5

15 Jul, 2022 | 11:15 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் ஓர் சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பெருவிருப்பத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு அமைவானதுமான நடவடிக்கைகளுக்கு கனடா ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டங்கள் படிப்படியாகத் தீவிரமடைந்துவந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஜனாதிபதித மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 13 ஆம் திகதியன்று தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் அவரது இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட பின்னணியில், நேற்று முன்தினம் பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் செய்திருக்கும் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் ஓர் சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான பெருவிருப்பத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதன்படி பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படக்கூடிய அமைதியானதும் அரசியலமைப்பிற்கு அமைவானதுமான நடவடிக்கைகளுக்கு கனடா ஆதரவு வழங்கும்.

அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின்மீதும், ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவையாகும்.

அதுமாத்திரமன்றி அத்தகைய வன்முறைத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டியது அவசியமாகும். மேலும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56