(எம்.மனோசித்ரா)
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.
அதற்கமைய எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் பதவிக்கான பெயரை சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கேட்டுக் கொண்தற்கு இணங்க புதிய பிரதமர் தொடர்பில் ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதற்கமைய புதிய பிரதமர் பதவிக்காக முன்மொழியப்படவுள்ள பெயரை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகரிடம் அறிவிப்போம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் குழுவினர் டலஸ் அழகப்பெருமவை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , ஏனைய கட்சிகளும் வெ வ்வேறு பெயர்களை இதற்காக பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM