தேசிய கட்டடங்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்க வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்

Published By: Vishnu

12 Jul, 2022 | 07:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன் ஆர்ப்பாட்டாரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய தேசிய கட்டடங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்க வேண்டும்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் கட்டமைப்பில் தீர்மானம் எடுப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும் வெற்றிக்கொள்ளலாம் என ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை தற்போது எதிர்கொள்கிறார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான நிர்வாகத்தினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது. மக்களின் எதிர்ப்பிற்கு முன்னால் எச்சக்தியாலும்  நிலைத்து நிற்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவர்களையும் மக்கள் இந்தளவிற்கு எதிர்க்கவில்லை.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய தேசிய கட்டடங்களை பாதுகாப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்றால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு பெற முடியாது. சகல நெருக்கடியினையும் வெற்றிக்கொள்ள பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற மக்களின் அழுத்தமான கோரிக்கை வெற்றிப்பெற்றுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23