(எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய ஜனாதிபதியின் முதலாவது கடமையாக ரஞ்சன் ராமநாயகவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பார்வையிடச்சென்றனர். அதன்போது ஊடகங்களுககு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயகவை சிறையில் அடைத்து இன்றுடன் ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. உண்மையை தெரிவித்தே சிறைக்கு சென்றார்.
அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் பல தடவைகள் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். என்றாலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ் அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் ராஜபக்ஷ் அரசாங்கத்தில் கொலைகாரர்களும், போதைப்பாெருள் கடத்தல்கார்களும் பொது மன்னிப்பில் விடுதலை பெற்றுச்சென்றுள்ளர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்க கொலை செய்த குற்றத்துக்கோ அல்லது போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாலோ சிறைப்படுத்தவில்லை.
அவர் எப்போதும் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து வருபவர். அதனால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே கோத்தாபய ராஜபக்ஷ் பதவி விலகிய பின்னர் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் புதிய ஜனாதிபதிக்கு முதலாவது கடமையாக ரஞ்சன் ராமநாயகவை விடுதலை செய்யும் கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி விடுக்க இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM