மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை (11) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்;ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வதுடைய கோபாலபிள்ளை புவனேசசிங்கம் என்பவரே தனது வீட்டின் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) வீட்டில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் தனது வீட்டு வளாகத்தில் உள்ள மற்றுமொரு குடிசை வீட்டுக்குச் சென்றவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போலின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்:சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM