இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (எஸ்எல்சி) தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையடுத்து, நேற்று காலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து நேற்று பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொவிட் தொற்றுக்குள்ளான பெத்தும் நிஸ்ஸங்கா உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு மாற்று வீரராக ஓஷத பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்படுவாரென கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை இலங்கையின் 6 வீரர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஜெஃப்ரி வெண்டர்சே, அசித்த பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, பிரவீன் ஜெயவிக்ரம, ஏஞ்சலோ மொத்யூஸ் ஆகியோர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM