இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம் 

Published By: Digital Desk 4

10 Jul, 2022 | 10:20 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்வானது இலங்கைக்கான உதவி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவாய் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Articles Tagged Under: International Monetary Fund | Virakesari.lk

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து , 13 ஆம் திகதி இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் , சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு தற்போதைய அரசியல் மாற்றம் வழிவகுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

'தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் , மக்கள் மீது குறிப்பாக ஏழை மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம். மேலும் இந்த கடினமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்' என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படவுள்ள தீர்க்கமான கலந்துரையாடல்களுக்கு நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுவது அத்தியாவசியமானதாகும். அவ்வாறன்றி அரசாங்கமொன்றின் நிர்வாகம் இன்றி நாட்டைக் கொண்டு செல்வது தவறாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05