(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் 3740 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இரண்டாவது கப்பல் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
முதலாவது எரிவாயு கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வந்தடைந்தது.
அதன் பின்னர் எரிவாயுவை தரையிறக்குதல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
3200 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. இந்த மாத்திற்காக சுமார் 33 000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய செவ்வாய்கிழமை (12) முதல் எரிவாயு விநியோகத்தை வழமை போன்று , ஒழுங்குமுறைமையொன்றுக்கமைய முன்னெடுக்கவுள்ளதாகவும், எரிவாயுவிற்கான கேள்வி தொடர்பில் நிலவும் நெருக்கடி இம்மாதத்தில் முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் லிட்ரோ நிறுவனம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM