(கா.சந்திரன்)
ஜி. எஸ்.பி வரிசலுகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்க கூடாது என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு,
முஸ்லிம் தனியார் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர் .
இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனியார் சட்டத்தை நிறைவேற்றுகின்ற உரிமை நல்லட்சிக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ இல்லை எனக் கூறி இன்று கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் பாரிய கண்டன ஆர்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டிருந்ததோடு தமது உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டு கை குழந்தைகளை வைத்துக் கொண்டும் முஸ்லிம் பெண்களும் கலந்துக் கொண்டிருந்தனர் .
சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் முஸ்லிம் தனியார் சட்டத்தை உடனடியாக நீக்கு , வெள்ளையனை திருப்பதிபடுத்த நாட்டின் அடிப்படை சட்டங்களை மாற்றலாமா ? , மனித உரிமை எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் சட்டத்தில் மூக்கை நுழைப்பதற்கு இடமளியோம் , இந்த கபட தனத்துக்கு எதிராக அரசாங்கத்தை வன்மையைக் கண்டிக்கின்றோம் , ஹரிமா சட்டம் இஸ்லாத்தின் உரிமை இதில் கை வைப்பது மத சுதந்திரத்தை சீரழிப்பதற்கு சமன் போன்ற எதிர்ர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
மேலும் முஸ்லிம்களின் போராட்டத்துக்கு நீதி கொடு அரசே , ஒற்றுமை குலைக்கும் ஒப்பந்தம் வேண்டாம், எமக்கு ஒரு போதும் ஜி. எஸ் ,பி வேண்டாம் , ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமைக்காய் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிப்பது சரியா , இலங்கையின் இறைமையை பாதிக்கும் வெள்ளையனுக்கு கூதா தூக்கும் வெளியுறவு கொள்கை வேண்டாம் சலுகைக்காக முதுகில் குத்தும் நன்றி மறந்த நல்லாட்சியே போன்ற கோசங்களும் வன்மையான முறையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM