கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விசேட அதிரடிபடையினரின் படைவீரர்களும், இராணுவ வீரர்கள் பலரும் தமது பாதுகாப்பு கடமையில் இருந்து பின்வாங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழிவிட்டு அகன்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தள்ளார்.ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM