(இராஜதுரை ஹஷான்)
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்தற்கு தேவையான 113 பெரும்பான்மையினை எதிர்வரும் வாரத்திற்குள் இறுதிப்படுத்துவோம்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை கவனத்திற் கொள்ளாமல் பிரதமரை நியமித்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்வரும் வாரகாலத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் எந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தாலும்,நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை.ஆகவே ஜனாதிபதியை பொருட்படுத்தாமல் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும்.6மாத காலத்திற்கு பின்னர் கட்டாயம் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள வலியுறுத்துகிறார்கள்.
சர்வக்கட்சி அரசாங்கம் ஒரு தற்காலிக தீர்வாகும்.தமக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கமாட்டார்.சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் எதிர்வரும் வாரம் மகாநாயக்க தேரர்களை சந்திக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM