வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வீதியில் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இளைஞர் குழுவினர் ஒன்றிணைந்து புதிதாக ஒரு புதிய வரிசையினை ஏற்படுத்தியதுடன், இன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போது தங்களது வரிசையினருக்கே எரிபொருளினை வழங்க வேண்டும் என தெரிவித்து சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பொல்லுகளை மீட்டிருந்தனர்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM