வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்திற்கருகில் வாள்களுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

08 Jul, 2022 | 07:05 PM
image

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வீதியில் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இளைஞர் குழுவினர் ஒன்றிணைந்து புதிதாக ஒரு புதிய வரிசையினை ஏற்படுத்தியதுடன், இன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போது தங்களது வரிசையினருக்கே எரிபொருளினை வழங்க வேண்டும் என தெரிவித்து சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பொல்லுகளை மீட்டிருந்தனர்

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொடூரமாக கொலை...

2025-05-12 10:20:00
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும்...

2025-05-12 10:16:51
news-image

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

2025-05-12 10:08:42
news-image

அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை,...

2025-05-12 09:47:56
news-image

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும்...

2025-05-12 09:21:42
news-image

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

2025-05-12 10:17:28
news-image

நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உறுதியாகவும்...

2025-05-11 22:35:26
news-image

பொருளாதார போரை வெல்ல புத்தர் காட்டிய...

2025-05-11 22:28:41
news-image

விடுதலைமிக்க, சமத்துவம் கொண்ட சமூகங்களை எம்...

2025-05-11 22:22:59
news-image

திருமணத்திற்கு அப்பாலான உறவு : ஆணொருவர்...

2025-05-12 08:05:43
news-image

இன்றைய வானிலை

2025-05-12 06:26:57
news-image

யாழில் உறவினரின் வீட்டில் திருமண விருந்து...

2025-05-12 02:36:45