( எம்.எப்.எம்.பஸீர்)
அரசியலமைப்பூடாக உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பொலிசார் மதிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விஷேட செய்தி ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். எனினும், சட்டத்தை மீறி வன்முறையுடன், அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேரடியாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது,
'அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள, கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் போன்றே, அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தையும் இலங்கை பொலிஸார் மதிக்கின்றனர். அத்துடன் பொது மக்களின் அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்கின்றனர். இது தொடர்பில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும், அனைத்து பொலிஸாருக்கும் அவ்வப்போது போதுமான தெளிவூட்டல்களை பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கும் போது, அது ஏனையோரின் உரிமைகளை மீறாத வகையில் அமையும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும். அதே போல் நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறி, அமைதி நிலைமை இல்லாமல் போகும் வகையில் வன்முறையுடன் நடந்துகொண்டு அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும், ஒன்று கூடல் மற்றும் கருத்து சுதந்திரத்தின் பேரிலான நடவடிக்கைகளை, அரசியலமைப்பூடாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொலிஸாரால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது, அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல், சட்ட ரீதியான சேவையில் உள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமால் பொறுப்புடன் செயற்படுமாறு அனைத்து பொது மக்கள் செயற்பட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.'என பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM