எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் 700 மில்லியன் ரூபாவை எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக செலுத்துவது எதற்கு - ஹர்ஷடி சில்வா

Published By: Digital Desk 3

06 Jul, 2022 | 09:33 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் வருகை தரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக  700 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளமை எந்தளவிற்கு நியாயமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வியெழுப்பினார்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் புதன்கிழமை (06) கூடிய போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணயத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரச கடன் மறுசீரமைக்கப்பட்டு,நாட்டின் கடன் நிலைபேறான தன்மையில் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்துள்ளது.எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தினர். 

நேற்று முன்தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டார்கள். எரிவாயு விநியோக த்தில் பல அடிப்படை சிக்கல்  காணப்படுவதை கோப் குழுவில் அறிய முடிந்தது.

எரிவாயு கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலை குறித்து கோப் குழு அதிக அவதானம் செலுத்தியுள்ளது.குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் வரிசை பல கிலோமீற்றர் தூரத்திற்கு நீண்டு செல்கிறது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 115 டொலராக காணப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கியின் விலை தற்போது 99 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் 700 மில்லியன் ரூபாவை எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக செலுத்துவது எந்தளவிற்கு நியாயமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் இறந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ....

2026-01-24 05:23:07
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC...

2026-01-24 05:15:26
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பில் வெளிப்படையான கலந்துரையாடல்...

2026-01-24 05:08:57
news-image

ஜனாதிபதி வாயால் வடை சுடாமல் பாதிக்கப்பட்ட...

2026-01-24 04:55:00
news-image

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள...

2026-01-24 05:02:18
news-image

22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்...

2026-01-24 04:32:31
news-image

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன்...

2026-01-24 04:31:10
news-image

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த...

2026-01-24 04:29:10
news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52