எரிபொருள் கொள்வனவு, விநியோகம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் - உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவு

Published By: Digital Desk 4

04 Jul, 2022 | 08:50 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

எரிபொருள் கொள்வனவு, விநியோகம்,  விநியோக நடவடிக்கையின் போது முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் எவை என்பதை தெளிவுபடுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர்  அறிக்கை ஒன்றினை முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு இன்று (4) உத்தரவிட்டது.

தற்போதைய அமைச்சரவை கட்டமைப்பு தொடர்பில் மன்றுக்கு அறிக்கை வேண்டும் - சட்ட  மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk

நீதியரசர் விஜித்  மலல்கொட தலைமையிலான  மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

மின்சாரம், சமயல் எரிவாயு, எரிபொருள், பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள  இரு அடிப்படை உரிமை மனுக்கள்  இன்று ( 4) விசாரணைக்கு  வந்த போதே  உயர் நீதிமன்றம்  இதனை அறிவித்தது.

மனுதாரர்களான  இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்காக  சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன்,  உதித்த இகலஹேவா சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜா,  புலஸ்தி ஹேவமான்ன  உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாத்தின் வாதங்களை அடுத்து பிரதிவாதிகளுக்காக ஆஜரான  சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளேயின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.

எஸ்.சி.எப்.ஆர். 106/ 22 மற்றும் எஸ்.சி.எப்.ஆர். 107 /22 ஆகிய இலக்கங்களின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,  அதன் உப தலைவர்  ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட,  செயலாளர்  சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, பொருளாலர் சட்டத்தரணி ரஜித்த பெரேரா,  பிரதி செயலர்  சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோரால் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள்,  திறை சேரியின் செயலர்,  மத்திய வங்கி ஆளுநர்,  மத்திய வங்கியின் நிதிச் சபை,  இலங்கை மின்சார சபை,  கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்,  அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்,  சட்ட மா அதிபர் உள்ளிட்ட 42 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்று மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கணக ஈஸ்வரன் மற்றும் உதித்த இகலஹேவா ஆகியோர்,  எரிபொருள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும்  அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டினர்.

 எரிபொருள் இன்மையால், அனைத்து துறைகளும்  வீழ்ச்சி கண்டுவருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணிகள், அவ்வாறான நிலையிலும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எந்த அக்கறையும் இன்றி செயற்பட்டு வருகின்றமை  நிலைமையை மோசமடையச் செய்வதாகவும் குறிப்பிட்டனர்.

இந்நிலைமையை சீர் செய்ய உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்கள், அதன்படி உடனடியாக நிலைமையை சீர் செய்ய  மனுதாரர்கள் கோரும் இடைக்கால  நிவாரண கோரிக்கையையாக அவ்வுத்தரவை பிறப்பிக்குமாறு அவர்கள் உயர் நீதிமன்றைக் கோரினர்.

 இதன்போது பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய,  பல அமைச்சுக்களின் செயலர்கள் சத்திய கடதாசி ஊடாக தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கான திட்டங்களை  நீதிமன்றில் முன் வைத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

 இதன்போது மனுதாரர்கலுக்காக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரனி உதித்த இகலஹேவா, அவ்வாறு முன் வைக்கப்பட்டுள்ள சில  சத்தியக் கடதாசிகள் தற்போதைய நிலைமையுடன் எந்த வகையிலும் தொடர்பற்றது என சுட்டிக்காட்டினார். 

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், மக்கள் நீதிமன்றை மட்டுமே நம்பும் நிலையில், மனுதாரர்கள் கோரும் இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா கோரினார்.

இதன்போது திறந்த மன்றில் பேசிய நீதியரசர்கள்,  எரிபொருள் விநியோகத்தின் போது முன்னிரிமை வழங்க வேண்டிய துறைகள் குறித்த   தெளிவு அதிகாரிகளிடமே இல்லை என  சுட்டிக்காட்டினர்.  எனினும் அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்க சட்ட மா அதிபருக்கு முடியும் என சுட்டிக்காட்டிய நீதியரசர்கள்  அதற்காக தலையீடு செய்ய  அதிகாரம்  என குறிப்பிட்டனர்.

இந் நிலையில்   எரிபொருள் கொள்வனவு, விநியோகம்,  விநியோக நடவடிக்கையின் போது முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள் எவை  என்பதை உள்ளடக்கி அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே இணக்கம் வெளியிட்டார்.

 இதனையடுத்தே அவ்வாறான அறிக்கையை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்  மனுக்களை மீள  எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  தீர்மானித்தது.

முன்னதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல்ச் செய்துள்ள இரு மனுக்களிலும், கணிய எண்ணெய்,  மின்சாரம், சமயல் எரிவாயு, உணவு, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள்,  அதனால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் மக்களின் அடிப்படை உரிமைகல் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை  தட்டுப்பாடின்றி  நிவாரண விலையின் கீழ் தொடர்ச்சியாக மக்களுக்கு விநியோகிக்க முடியுமான செயற்றிட்டம் ஒன்றினை தயரைக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தர்விடுமாறு இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.

அதே போல், பொருளாதார நிபுணர்கள்,  அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி  தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான குறுகிய கால,  மத்திய கால நீண்ட கால  கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறும்  மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

 அத்துடன்  பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு  நிவாரணம் வழங்க தேவையான  தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கவும் உத்தரவிடுமாறு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.

அதனைவிட, தேசிய விவசாயம்,  பால் உற்பத்தி,  பன்னை உற்பத்திகளை அதிகரிக்க கொள்கை ரீதியிலான  செயற்றிட்டம்  ஒன்றினை வகுக்கவும் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00