மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் ஆதித்ய கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீயான் விக்ரமின் தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
புத்தக வாசிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமான சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு லைகா நிறுவனம் - மணிரத்னம் ஆகியோர்களின் கூட்டு முயற்சியில் இந்த நாவல் இரண்டு பாகங்களாக 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரிலேயே திரைப்படமாக உருவாகிறது.
இதில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ,கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், ஏ ஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற 'வருகிறான் சோழன்' என்ற காட்சித் துணுக்கு வெளியானது. இதற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது இதில் ஆதித்யா கரிகாலனாக நடித்திருக்கும் சீயான் விக்ரம் அவர்களின் கதாபாத்திரத்தோற்றம் புகைப்படமாக வெளியிடப்பட்டிருக்கிறது. சீயான் விக்ரம் கம்பீரமானத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இனி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படம் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM