22 ஆம் திருத்த சட்டத்தை விரைவாக அமுல்படுத்தி நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டிலுள்ள நான்கு முக்கிய பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 10 அம்ச கேரிக்கை அடங்கிய கடிதமொன்றை எழுதி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நேர்மையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தருணத்தில் கட்சி அரசியலில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்திய அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
முறையான பொருளாதாரத் திட்டமிடலில்லாமல் செயற்படும் நிர்வாகத்தின் விளைவாகவே இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM