(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தி தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகொஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.
முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது தூதுவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார். ஜப்பான் இலங்கைக்காக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்தார்.
இதே வேளை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன். இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
மேற்கண்டவாறு வெளியாகிய செய்திகள் தொடர்பில் மறுப்பு தெரிவித்து இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஜப்பான் இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், இந்த செய்திக்கான தமது மறுப்பினை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM